Wednesday 24 June 2009

குறும்பன் அத்தியாயம் 5: முல்லாவும் பிணமும்

மூன்று மணி நேரம் நடந்தபின் தேப்-குஜார் என்ற இடத்தை அடைந்தோம். பொழுது நன்றாக விடிந்துவிட்டது. மளிகைக்காரக் கிழவன் அப்போதுதான் கடையைத் திறந்தான் . வழிச் செலவுக்கு வேண்டிய சாமான்களை அவனிடம் வாங்கிக் கொண்டோம், உப்பு ஒரு ராத்தல், உலர்ந்த ஆப்ரீக்காட் பழங்கள் இரண்டு ராத்தல்கள், மக்காச்சோள மாவு ரொட்டிகள் ஆறு, நூல், ஊசி, கொளகொளத்த இரண்டு முலாம்பழங்கள் ஆகியன. இவை எல்லாம் பதினான்கு கோப்பெக்குகளுக்குள் அடங்கிவிட்டன. எட்டு கோப்பெக்குகள் நாங்கள் கொடுத்தோம், பாக்கியை முல்லா கொடுத்தான். எங்களை ஓரப்பார்வையாகப் பார்த்துவிட்டு மேலங்கியின் ஓரத்தையலைப் பிரித்து உள்ளிருந்து பணத்தை எடுத்தான். கொஞ்சம் பணம் அவனிடம் எஞ்சியிருந்தது எனத் தெரிந்து கொண்டோம்.

மேலே நடந்து விரைவிலேயே பசிய பள்ளத்தக்கை அடைந்தோம். பாதையின் வலப் புறம் , மலையடிவரத்தின் அருகே ஓடியது தெளிந்த நீரோடிடை. முதிர்ந்த பாப்ளார் மரத்தின் அடியில் ஓடை ஓரமாக உட்கார்ந்து முலாம்பழத்தைக் கூறுபோட்டு ரொட்டியுடன் சாப்பிடத் தொடங்கினேம். முல்லா தன் முலாம்பழத்தைத் தின்றபடியே அவ்வப்போது என்னையும் அமனையும் நோட்டமிட்டான். முடிவில் அவனுக்குப் பேச்சு கிளம்பிற்று.

“என் அலங்கோலத் தோற்றத்தைக் காண்கிறீர்கள், குழந்தைகளே. அதிர்ஷ்டம் எப்பேர்ப்பட்ட மனிதனை உங்களிடம் அனுப்பியிருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியாது”-- அவன் பெருமூச்செறிந்து தலையை ஆட்டினான்.

“உங்களுக்குத் தெரியாது, அல்லவா?” என்றான்.

அமன் வாய் நிறைய முலாம்பழத்தைத் திணித்துக் கொண்டிருந்தபடியால் பேசாதிருந்தான். நானோ, பட்டும் படாமலும் “ஹ்ம்” என்று சொல்லி வைத்தேன். எங்களுக்குத் தெரியாதுதான், ஆனாலும் ஏதோ கொஞ்சம் உணர்கிறேம் என்று அதற்கு அர்த்தம் செய்து கொள்ளலாம்.

“இல்லை, உங்களுக்குத் தெரியாது” என்று முன்னைவிட அதிகத் துயரத்துடன் பெருமூச்சு விட்டான் முல்லா. அப்புறம் விருப்பம் இல்லாதவன்போல இன்னெரு துண்டு முலாம்பழத்தை ரொட்டியுடன் சவைத்து விழுங்கி விட்டுப் பேச்சைத் தொடர்ந்தான். “நான் மிகப் பழைய, மிகப் புகழ் பெற்ற வம்சத்தில் பிறந்தவனக்கும்... ஆம், ஆம் , மிக மிகப் புனிதமான புகாரா நகரத்தைச் சேர்ந்தவன்!... என் முன்னேர்கள் தாஷ்கந்த் நகருக்குக் குடி பெயர்ந்த போது, தாஷ்கந்த் நகரம் முழுவதுமே இன்பப் பெருக்கால் களி துள்ளிற்று. ஆமாம் என் குழந்தைகளே, எங்கள் பாட்டனர்களும் கொள்ளுப்பாட்டனர்களும் மாண்பு மிக்க மௌலானக்கள்! பாட்டனர்கள் வரை போவானேன்? காலஞ்சென்ற என் தகப்பனர் மிகப் பெரிய மனிதராய் இருந்தார். அவர் “குஃப்” என்க வேண்டியது தான், ஆறு எதிர்முகமாகப் பாயத் தொடங்கும். “ஸுஃப்” என்றரோ, குருடன் பார்வை பெற்றுவிடுவான்! ஆமாம்... அவர்மேல் நம்பிக்கை இல்லாதவர்கள் அனேகமாகக் கிடையாது. என்னுடைய துரதிர்ஷ்டம் தான், அவர் அவ்வளவு சிறு வயதில் இறந்துபோனார்.”

இவ்வாறு சொல்லி மீண்டும் சோகப் பெருமூச்சுவிட்டு, இடுப்புக்குட்டை நுனியால் கண் ஓரத்தைத் துடைத்துக் கொண்டு முன்போன்ற அதே விருப்பற்ற தோற்றத்துடன், கணிசமாகப் பெரிய இன்னொரு முலாம்பழத் துண்டைச் சவைத்து விழுங்கினான் முல்லா.

“அப்புறம் தாய் வழியில் – தாய் வழியில் மட்டும் என்ன, நாங்கள் ஆண்ட கூடத் தன் மதபக்திக்குப் பெயர் போனவள் ஆயிற்றே. அவளால் செய்ய முடியாததே எதுவும் இல்லை! மந்திரம் போட்டுக் காதல் வசியம் செய்வாள், தம்பட்டத்தை வைத்துக் கொண்டும், அடுப்பில் ஏற்றிய புது மண்பாத்திரத்தை வைத்துக் கொண்டும் குறி சொல்லுவாள்! அவளுக்குத் தெரியாத சக்தியுள்ள மந்திரங்களே உலகத்தில் கிடையாது!” – இங்கே அவன் பேச்சை நிறுத்திவிட்டு என்னையும் அமனையும் கூர்ந்து நோக்கினான். “குழந்தைகளே, இது உங்களுக்குப் படிப்பினையாக இருக்கட்டும். சின்ன வயதிலிருந்தே பெரியவர்களிடம் கற்றுக் கொள்ள நான் விரும்பவில்லை. வெகு காலம் தாழ்த்தே சுதாரித்துக் கொண்டேன். விளைவு என்ன, பாருங்கள். மாபெரும் மௌலானாக்களின் வமிசத்தில் பிறந்த என்னை எவர்களோ அற்பக் கயவர்கள் அடிக்கத் துணிந்து விட்டார்கள் – அவ்வளவு இழிநிலைக்கு வந்துவிட்டேன் நான்!”

அவன் மறுபடியும் இடுப்புக் குட்டையால் கண் ஒரத்தைத் துடைத்தான், கண்ணீர்ப் பெருக்கைத் தேக்கி நிறுத்த முயல்பவன் போலச் சிறிது நேரம் அங்கே ஏதோ நோண்டிக் கொண்டிருந்தான். இதில் அவனுக்கு முழு வெற்றி கிடைத்து விட்டது. ஏனென்றால் சிறு கண்ணீர்த் துளிகூட மேற்பரப்பில் காணப்படவில்லை. முயற்சி பலித்துவிட்டதால் மகிழ்வடைந்து அவன் மறுபடி எங்களை நோக்கி, கம்பீரமாகச் சொன்னான்.

"துரதிர்ஷ்டம் என்னைக் கடுமையான சேதனைகளுக்கு உட்படுத்திற்று. ஆனால் இப்போது நான் மெய் வழியில் செல்லத் தொடங்கிவிட்டேன். என் முன்னோர்களின் மூதறிவை அல்லா எனக்குத் திரும்ப அருளிவிட்டார். மந்திரங்களாலும் தொழுகைகளாலும் நான் மக்களின் நோய்களைக் குணப்படுத்துகிறேன். பிரார்த்தனைக் காகிதங்களாலும் நோய் தீர்க்கிறேன். இது என்ன, தெரியுமா உங்களுக்கு?”

எனக்குத் தெரியும். ஆனால் அமன் தனக்குத் தெரியாது என்று மரியாதையாக ஒப்புக் கொண்டான். முல்லாவின் சொற்கள் அவன் மனதில் பெருத்த பதிவை ஏற்படுத்திவிட்டன என்று தெரிந்தது.

“ஒரு காகிதத் துண்டில் நான் பிரார்த்தனை எழுதுவேன், அப்புறம் அதைத் தண்ணீரிலோ, தேநீரிலோ அரைத்துக் கலக்கி நோயாளிக்குக் குடிக்கக் கொடுப்பார்கள்... ஆயிற்றா. தவிர, வசீகரணம் செய்யவும் வசீகரணத்தைப் போக்கவும் வேண்டிய சாதனங்களை நான் அறிவேன். உண்மையில் மாபெரும் மௌலானாக்களின் வழிவந்தவனை அல்லா தன் கருணைக்கு ஆளாக்காமல் விட்டுவிடுவதில்லை!”

“நீங்கள் மதப் பள்ளியில் படித்தீர்கள், இல்லையா, முல்லா?”

“மௌலானாக்களின் மகனுக்கு மதப்பள்ளி எதற்காக? நான் வீட்டில் தான் கற்றுக் கொண்டேன். மந்திரங்கள் எழுதிய கவசங்களும் ரட்சைகளும் தயரிக்க மதப் பள்ளியில் கற்றுத் தருகிறார்களா என்ன? நானோ, பிரார்த்தனைகள் மட்டுமே அல்ல, மாபெரும் பெயர்கள் கூட எழுத அறிவேன்! நீங்களே பார்ப்பீர்கள். பல கிராமவாசிகள் என்னைப் பின்பற்றுறுபவர்கள். சிலர் என்னை “மௌலனா-பாதுஷா” என்றும் வேறு சிலர் “ஒதுவார்-தலைவர்” என்றும் இன்னும் சிலர் “முல்லா-அகா” என்றும் அழைப்பார்கள். அடே, என் முழுப் பெயர் என்ன என்பதே உங்களுக்கு இன்னும் தெரியாதே...”- அவன் நெடு மூச்சு இழுத்தான், விழிகளை உருட்டினான், “முல்லாமுஹம்மது ஷரீஃப் பின்னி முல்லாமுஹம்மது லத்தீஃப் இப்னி கவ்ஸில் ஆஜம்!” என்று ஒரே மூச்சில் கடகடவென்று ஒப்புவித்துவிட்டு மறுபடி அப்பாடா என்று மூச்சிழுத்தான். அமன் ஆவென்று வாயைத் திறந்தவாறு அதிசியத்துடன் அவனைப் பார்ப்பதைக் கண்டேன். உள்ளதைச் சொன்னால், முல்லாவின் முழுப் பெயர் எனக்கும் வியப்பு ஊட்டாமல் இல்லை. இவ்வளவு நீளப் பெயரை இதற்கு முன் நான் கேட்டதே கிடையாது. ஆனாலும் தலைக்குநாள் திண்ணைமேல் நடந்த நாடகத்தை என்னல் மறக்கவே முடியவில்லை. ஜேபடித் திருடன் ஸுல்தானுக்கு இந்த முல்லா. ரொம்பத்தானே இச்சகம்பேசி அடி வருடினான்.

“நல்லது. அல்லாவே என்னை உங்களிடம் அனுப்பியிருக்கிறர் என்பதை இப்போது நீங்களே காண்கிறீர்கள்” என்று பேச்சைத் தொடர்ந்தான் முல்லா.

“நீங்கள் என்னோடு கூட்டு சேர்ந்து வேலை செய்ய வேண்டும். மற்றவர்களுக்கு முன்னே என்னை “ஹஜரத்” (அருளாளர்) என்று அழைக்க வேண்டும். நான் உங்களை என் சீடர்கள் என்று அழைப்பேன்-- இஸ்லாம் மதக் கோட்பாடுகளையும் உங்களுக்குக் கற்பிப்பேன்! இதற்கு நீங்கள் ஒப்பினால் இலையுதிர் காலத்துக்குள் நம்மிடம் பணம் ஒன்றுக்கும்ப் பத்தாகப் பெருகும், நல்ல துணி மணிகளும் செருப்பு ஜோடுகளும் கிடைக்கும், எல்லாம் வேண்டிய அளவு பெறலாம், திகட்டத் திகட்டச் சாப்பிடலாம், தவிர கௌரவத்துடன் ஊர் திரும்பலாம். என்ன சொல்கிறீர்கள், சம்மதமா? அப்படியானல் நினைவு வைத்துக் கொள்ளுங்கள்: ஒருவரும் பக்கத்தில் இல்லாதபோது என்னை ‘முல்லா-அகா’ என்றோ ‘ஷரீஃப்ஜான்-அகா’ என்றோ நீங்கள் அழைக்கலாம். ஆனால் மற்றவர்களுக்கு எதிரே ‘ஹஜ்ரத்’ என்று மட்டுமே அழைக்க வேண்டும்! கிடைக்கிற பணம், சாமான்கள், இவற்றை நான்காகப் பங்கிடுவோம். எனக்கு இரண்டு பங்குகள், உங்களுக்கு ஆளுக்கு ஒரு பங்கு. கொடுத்த வாக்கை மீறுபவன் புனித மெக்கா பக்கம் திரும்பவே முடியாதவன் ஆவானாக! ஆமென்!”

நாங்கள் முழந்தாள் படியிட்டுக் குனிந்து நிமிரத் தொடங்குவதற்குள் பாதையில் புழுதிப் படலாம் கிளம்பக் கண்டோம். புழுதிப் படலம் வர வர எங்களை நெருங்கிற்று. முடிவில் குதிரைச் சவாரி செய்பவனின் நிழலுரு படலத்தினுடாகத் தெரிந்து . அவன் குடியானவன் போலக் குதிரைச் சவாரி செய்வதைத் தொலைவிலேயே கண்டு கொண்டோம். அவனுடைய மேலங்கி விளிம்புகள் காற்றில் பறந்தன. குல்லா பின் மண்டைப் பக்கம் சரிந்தது. குதிரையின் உடம்பெல்லாம் நுரைத்திருந்தது. எங்கள் அருகே வந்ததும் சவாரிக்காரன் அதைச் சிரமத்துடன் நிறுத்தினான்.

“ஸலம் அலேய்க்கும், முல்லா –அகா, எங்கே போகிறீர்கள்?”

நாங்கள் மரியாதையாக அவனுக்குப் பதில் வணக்கம் தெரிவித்தோம். எங்கள் பயணத் திட்டங்களை அவனிடம் விவரிக்கவில்லை. ஆனால் அவனது அக்கறை முற்றிலும் வேறு விஷயத்தில் இருத்தது.

“இஸ்லாம் மத விதிகளின்படி பிரேதத்தைக் குளிப்பாட்டி இறுதிச் சடங்கு செய்துவைக்கக் கூடிய யாராவது பக்திமான் உங்களில் இருக்கிறரா?” என்று கேட்டான் அவன்.

முல்லா எங்களைப் பார்த்தான். நாங்கள் அவனுக்குத் தலை வணங்கினோம். பிறகு அவன் பெருமிதத்துடன் தொண்டையைக் கனைத்துக் கொண்டு கம்பீரமான தோரணையில் பதில் அளித்தான்:

“இருக்கிறர். நாம் எவ்வகையில் உதவ முடியும்? நாம் தாஷ்கந்த் நகரவாசி. மௌலான வம்சத்தினர். மதப்பள்ளியில் கல்வி பயின்றேம். இப்போது விடுமுறை. எனவே, தூய காற்றைச் சுவாசிப்பதற்காக, கிராமம் கிராமமாகச் சுற்றி வருகிறேம். இவர்கள் எமது மாணவர்களில் இருவர்...”

சவாரிக்கரான் சந்தோஷம் காரணமாகச் சேணத்தில் இருப்பு கொள்ளாமல் தவித்தான். முல்லா தன் ஆடம்பரப் பேச்சை முடிக்கும் வரை காத்திருக்கவே அவனுக்குப் பொறுமை இல்லை. சொர்க்கப் பூங்காவின் சுற்றுச் சுவரில் இரகசிய வழியைக் கண்டுவிட்டவன் போலக் களி துள்ளினான் அவன்.

“ஆகாகா, பெரியோர்களே, ரொம்ப சந்தோஷம். ஆண்டவனே உங்களை அனுப்பி யிருக்கிறன்! சீக்கிரம் போவோம்!“– அவன் குதிரையைத் திருப்பினான். அப்புறந்தான் விஷயம் என்ன என்று விவரித்தான்.

“பெரியவரே, நாங்கள் கால்நடை மேய்ப்பர்கள். எங்கள் தங்கிடம் இங்கிருந்து கொஞ்ச தூரத்தில் இருக்கிறது. எங்கள் ஆட்களில் ஒருவன் நோய்ப்பட்டு இறந்துபோனான். அவனை முழுக்காட்டி, அவன் ஆன்ம சாந்திக்காகத் தொழுகை படிக்க யாரும் இல்லை. என்ன செய்வது என்று எங்களுக்கத் தெரியவில்லை... ஆகாகா, பெரியவரே, ஆண்டவனேதான் உங்களை அனுப்பியிருக்கிறன்... நல்லது, வாருங்கள் போவோம்.”

அமன் விரிப்பை மடித்து எடுத்துக்கொண்டன். சவாரிக்காரன் குதிரையிலிருந்து இறங்கி, முல்லாவைச் சேணத்தின்மேல் உட்கார வைத்தான். நாங்கள் மூவரும் நடந்தோம். வழி மிக நீண்டது. இரண்டொரு முறை நாங்கள் இளைப்பாறினேம். மலை ஒன்றின் உச்சியிலிருந்த தொலைவில் மேய்ப்பர்களின் தங்கிடத்தைக் கடைசியில் கண்ணுற்றேம் மண்சுவர் சூழ்ந்த பழைய கோட்டை. அதன் அருகே சில கூடாரங்கள்.

“அதுதான் எங்கள் தங்கிடம். கூடாரங்கள் தெரிகின்றனவா? விரைவில் அங்கே போய்ச் சேர்ந்துவிடுவோம்.” என்றான் எங்கள் வழிகாட்டி.

நடுப்பகல் தறுவாயில் அங்கே போய்ச் சேர்ந்தோம். இந்த மேய்ப்பர் அவர்களுடைய குடும்பங்களும் கால்நடைகளும் இப்போது அங்கேயே இருந்தன. ஒரு மேய்ப்பன் நோய்ப்பட்டு விட்டான். அவன் நிலைமை மிகவும் மோசமானதும் ஒரு இருபது இளைஞர்களும் சில முதியவர்களும் அவனை இங்கே கொண்டுவந்தார்கள். அவனுக்கு அந்திமச் சடங்கு செய்துவைக்கக் கூடியவன் எவனும் ஸ்தெப்பியில் இல்லை. வழியிலேயே அவன் இறந்து போனான்.

நாங்கள் அருகே நெருங்கியதும் எல்லோரும் கூச்சலுடன் எழுந்து, மரியாதையைக் காட்டும் முறையில் கைகளை மார்புறச் சேர்த்து வணக்கம் கூறி வரவேற்றார்கள். “காலமானவன் எங்கே?” என்று மிடுக்குடன் கேட்டான் முல்லா. பிணம் கோட்டைக்குள் இருந்தது. கோட்டையின் உட்புறம் ஜமீன்தாரின் கால்நடைப் பட்டி போல இருந்தது. வெகு சில திறப்புக்கள் கொண்ட திண்ணிய சுவர்களும் இரட்டைக் கதவுகளும். முகப்பு வெளியின் நடுவே சிறு குளம் காணப்பட்டது. தரைக்கீழ் ஊற்றுக்களிலிருந்து தண்ணீர் அதில் நிறைந்ததுபோல் தோன்றியது. குளக்கரை பாசி படர்ந்திருந்தது. தண்ணீரில் கூடச் சில இடங்களில் பாசி தெரிந்தது. சில இளம் பாப்ளார் மரங்கள் குளத்தைச் சூழ்ந்திருந்தன. பழைய பாப்ளார் மரங்கள் வெகு கலத்துக்கு முன்பே வெட்டப்பட்டுவிட்டன. அவற்றின் அடிமரத் துண்டுகளிலிருந்து வளர்ந்திருந்தன இள மரங்கள். கோட்டை பழங்காலத்தது, அச்சந்தருவது. பிணத்துக்கு ஏற்ற இடம்.

நானோ அமனோ வாழ் நாளில் ஒரு தரங்கூடப் பிணத்தை முழுக்காட்டியதில்லை என்று நீங்களே ஊகித்துக் கொண்டிருப்பீர்கள். நான் கோழை அல்ல. ஆனால் பிணங்கள்மேல் எனக்கு ஒரே பயம். செத்த பூனைகளைக்கூடப் பார்க்காதிருக்க முயல்வேன். எங்கள் வட்டாரப் பையன்கள் செத்த பூனைகளை எவ்வளவு வேண்டுமானாலும் வால்களைப் பிடித்துத் தூக்கிப் போகத் தயாராயிருந்தார்கள். நானோ, கிட்டத்திலேயே போக மாட்டேன். ஆனால் முல்லா, பிறந்தது முதல் பிணங்களை முழுக்காட்டுவது தவிர வேறு எந்த வேலையும் செய்யாதவன் போன்ற தோற்றத்துடன் துணிச்சலாக முன்னே நடந்தான். ஒவ்வோர் அடியிலும் ஏதோ முணுமுணுத்தான். அடிக்கடி முகத்தைக் கைகளால் தடவிக் கொண்டான். ஏதோ சுருக்கமான பிரார்த்தனையை ஜெபிப்பவன் போன்ற பாவனையுடன் “குஃப்-ஸுஃப்!” என்ற தனக்குப் பிடித்த சொற்களை உச்சரித்தவாறு பல்வேறு திசைகளில் திரும்பினான். நான் அவனைத் தொடர்ந்து சென்றேன். மந்திரங்களுக்குப் பதில் சர்வ சாதாரணமான சொற்களை அவன் முணுமுணுப்பது என் காதில் விழுந்தது. “அப்பா, என்ன வெக்கை!... இறைச்சி வதக்கலும் புலவும் மட்டும் இப்போது கிடைத்தால் எவ்வளவு நன்றாயிருக்கும் குழந்தைகளே... குஃப்-ஸுஃப்! ஐயோ, நிறையப் பணம் அருள்... குஃப்-ஸுஃப்!.” ஆனால் அவன் ஒரு கை வீச்சல் நூறு போய்களை விரட்ட உண்மையிலேயே வல்லவன் போலத் தோன்றியது.

பிறகு முல்லா அமனை அழைத்துச் சவச்சீலை கோட்டு வாங்கும்படிக் கட்டளையிட்டான். அமன் மேய்ப்பர்களைக் கேட்டான் அவர்கள் ஒரு நான்கு கெஜம் கைத்தறித் துணியைக் கொண்டுவந்து கொடுத்தார்கள். முல்லா மறுபடி அமனை அழைத்து ஏதோ உத்தரவிட்டான். அமன் அந்த உத்தரவைக் கூடியிருந்தவர்களுக்கு அறிவி்த்தான். எல்லோரும் கோட்டைக்கு வெளியே போய்விடும்படியும், அதன் பக்கத்திலேயே வராதிருக்கும்படியும் சொன்னான் அவன். முழுக்காட்டு முடியும் வரை உள்ளே பார்க்கக்கூடாது என்றும் பார்ப்பவர்களுக்கு ஆபத்து என்றும் எச்சரித்தான். எவனாவது உள்ளே பார்த்தால் அவனுக்குப் பயங்கரமான பாவம் சேரும் என்றும் விளைவாக அவன் மடிந்தபின் அடக்கம் செய்யப்படாமல் போவான் என்றும் ஹஜரத் கூறுகிறார் என்றான். இன்னும் பெரிய துன்பங்களும் நேரலாம் என்று அச்சுறுத்தினான்.

எல்லோரும் இடித்துத் தள்ளிக்கொண்டு வெளியே ஒடிவிட்டார்கள். நாங்கள் வாயில் கதவை மூடித் தாழ்ப்பாள் போட்டோம். முகப்பில் கிடந்த பெரிய கற்பாளத்தைத் தூக்கிவந்து ஆட்டங்கண்ட கதவுக்கு அண்டை கொடுத்தோம். முல்லா எங்களைப் பார்த்தான், நாங்கள் அவனைப் பார்த்தோம்.

“இப்போது என்ன செய்யப்போகிறோம்? நீங்கள் எப்போதாவது பிணத்தை முழுக்காட்டியது உண்டா?” என்று கேட்டான் முல்லா.

“கிடையாது” என்று ஒரே குரலில் சொன்னோம் நாங்கள்.

“நல்ல சங்கடந்தான்! நானும் முழுக்காட்டியதில்லை. ஆனால் பத்து ரூபிள்கள் கொடுக்க வேண்டும் என்று அவர்களிடம் பேசி வைத்துவிட்டேனே! முழுக் காட்டாவிட்டால், தொலைந்தது பணம்...” – அவன் ஒரு கணம் போசாதிருந்து விட்டு, “இதிலே ஐந்து ரூபிள்கள் நான் எடுத்துக் கொள்வேன், ஆளுக்கு இரண்டரை ரூபிள்கள் நீங்கள் எடுத்துக் கொள்வீர்கள்.” என்று சந்தர்ப்பத்தை நழுவ விடாமல் நினைவுபடுத்தினான்.

“சரி. ஆனால் முழுக்காட்டை நீங்களேதான் நடத்த வேண்டும்” என்றேன் நான்.

முல்லா தலையை ஆட்டிவிட்டு, பிணம் கிடந்த அறைக்குப் போனான். நாங்கள் தயக்கத்துடன் அவன் பின்னே சென்றோம். பிணம் மல்லாக்கக் கிடந்தது. அதன் முகமும் வயிறும் பழைய மேலங்கியால் முடப்பட்டிருந்தன. கால்கள் திறந்திருந்தன. முல்லா முன்னே அடி வைத்தவன் அக்கணமே பின் வாங்கினான். எனவே நானும் அமனும் அவன்மேல் மோதிக் கொண்டோம். உதடுவரை வந்த வசவைச் சிரமத்துடன் அடக்கிக் கொண்டு நாக்கைக் கடித்துக் கொண்டான் முல்லா. நான் இதைக் கவனித்தேன். என் திகில் இன்னும் அதிகம் ஆயிற்று. இறந்தவனின் புலப்படாத ஆவி அறைக்குள் நின்று எங்களைக் கவனிப்பதுபோல எனக்குத் தோன்றியது. மார்புக்குள் என் இருதயம் இரவுக் காவல்காரனின் அடிகட்டைபோல விரைவாக உரக்க அடித்துக் கொண்டது.

அமன் நுனிக்கால்களால் நடந்து முன்னே போய், பிணம் என் பார்வையில் படாமல் மறைத்தான். திடீரென அவன் பின்னே நகர்ந்து வீரிடத் தொடங்கியவன் யாரோ கழுத்தை நெரித்துவிட்டது போல மௌனமாகித் தரையில் சாய்ந்தான். முல்லா துள்ளி விலகி வாயிலோடு ஒண்டிக் கொண்டான். நானோ, கிலியால் இடத்தை விட்டு அசையவே இயலாதவனக, இறந்தவனை உற்று நோக்கி, ஒவென்று அலறினேன். இறந்தவன் உயிர் பெற்றுவிட்டான்! ஆம், ஆம், கால்கள் அசைவற்றுக் கிடந்தன, ஆனால் முகத்தை மூடியிருந்த மேலங்கியை அசைத்தவறு தலையைத் தூக்க அவன் முயன்றான்! இது தன் அமனுக்குத் திகல் ஊட்டியது. கிலியால் அவன் உணர்வு இழந்துவிட்டான்...

என் இருதயம் வெடித்துவிடும்போல் இருந்தது. நான் ஓடுவதற்காகத் திரும்பியவன் சிற்றறையின் தரையில் நீண்டு கிடந்த அமனின் கை தடுக்கிக் குப்புற விழுந்தேன். விழும்போது நான் முல்லாமேல் இடித்து விட்டேன். அவனும் உறுதியின்றி நின்று கொண்டிருந்தான் ஆகையால் சந்து விழுந்தான். நாங்கள் எழுந்திருப்பதற்காகத் தட்டித் தடுமாறினேம். முடிவில் நான் எப்படியோ எழுந்து நெருக்கிப் புகுந்து வாயிலுக்கு வெளியே போய் முகப்பு வேலியில் தாவிக் குதித்தேன். முல்லா என் பின்னே தவழ்ந்து வந்தான். நான் அறையைத் திரும்பிப் பார்த்தேன். பெருந் திகில் என்னைப் பற்றிக் கொண்டது. கரகரத்த குரலில் “ஆட்களே! ,ஆட்களே!” என்று வீரிட்டுக் கத்தினேன்.

என் கூச்சலைக் கேட்டு இறந்தவனின் இனத்தவர்கள் கலவரம் அடைந்து வாயில் கதவுகளை இடித்துத் திறக்கவில்லை. பக்கத்தில் போய்க் கற்பாளத்தை அகற்ற வேண்டும் என்ற எண்ணம் அச்சம் காரணமாக எனக்குத் தோன்றவில்லை. தோன்றியிருந்தாலும் என்னால் அகற்ற முடிந்திருக்காது. முல்லாவோ, குளத்துக்குத் தவழ்ந்து போய் நாற்ற நீரால் முடிவின்றி முகங்கை கழுவிக் கொள்ளலானான். வெண்பனி போல வெளிறி இருந்தான் அவன். எவையோ பிரார்த்தனைகளைப் படித்தவாறு முழு மூச்சாகத் தன்மேல் ஊதினான்.

முடிவில் சில ஆட்கள் கோட்டை மதிற்சுவர் ஏறி உள்ளே குதித்து, மற்றவர்களுக்குக் கதவுகளைத் திறந்துவிட்டார்கள். நடந்தது என்ன என்பதை நான் அவர்களுக்கு முச்சு திணற விவரித்தேன். பயத்தால் அவர்களுடைய விழிகள் தெறித்துவிடும் போல் ஆகிவிட்டன. ஆனால் இறந்தவன்மேல் அவர்கள் எங்களைக் காட்டிலும் உளமார்ந்த பரிவு கொண்டிந்தார்கள். .எனவே அச்சத்தை அடக்கிக் கொண்டு அறையை நோக்கி நடத்தார்கள். நான்கள் கூட்டமாகச் செறிந்தோம். அதற்குள் ஏதோ ஒன்று மேலங்கியை இழுத்துக் கொண்டு எங்களை நோக்கிப் பாய்ந்தது. எல்லோரும் கூச்சலிட்டார்கள். அதுவோ, காட்டுப்பூனை! அது அறைக்குள் போய்ப் பிணத்தின் தலையருகே உட்கார்ந்திருக்கிறது. நாங்கள் உள்ளே நுழைந்ததும் கலவரம் அடைந்து மேலங்கிக்கு உள்ளிருந்து வெளியே வர முயன்றிருக்கிறது. அதைக் கண்டு தான் பிணம் தலையைத் தூக்குகிறது என்று நாங்கள் நினைத்துவிட்டோம்...

பூனை கண்மூடிக் கண் திறப்பதற்குள் சுவற்றின்மேல் பாய்ந்து ஏறி மறைந்துவிட்டது. அதனுடன் ஒட்டிக் கொண்டிருந்த மேலங்கி சுவற்றின் மேல் தொங்கிற்று. பாவம், இறந்தவனின் இனத்தவர்கள் ஒருவரை ஒருவரும் எங்களையும் பார்த்தார்கள், பின்பு ஹோ-ஹோ-ஹோ வென்று உரக்கச் சிரித்தார்கள். முல்லாவை வைத்துக் கொண்டு பார்த்தால், எங்கள் முகத்தோற்றத்தைக் கண்டு அந்த இழவு வேளையில்கூடச் சிரிப்பை அடைக்குவதே முடியாது என்று எனக்கு நிச்சயமாகப் பட்டது. எங்களை ஏற இறங்கப் பார்த்துவிட்டு, மேலும் மேலும் சிரித்தபடியே அவர்கள் மறுபடி வெளியே போய்விட்டார்கள். முல்லாவும் நானும் வாயில்கதவுகளை மறுபடி இழுத்துப் பூட்டிக் கற்பாளத்தை அவற்றின் மேல் சார்த்தினேம். அமனுக்கு என்ன நேர்ந்தது என்று கவனிப்பது அவசியமாயிருந்தது. அவன் இன்னும் சுய உணர்வுக்கு வரவில்லை. நாங்கள் அவனை அறையிருந்து தூக்கி வந்து குளத்தின் கரையில் உட்கார்த்தி, அவன் முகத்தில் தண்ணீர் தெளிக்கத் தொடங்கினேம். அப்போதுதான் அவன் உணர்வு அடைந்தான். முல்லா அவன் மேல் ஊதி, “இதோ... இதோ சொஸ்தம் ஆகிவிடும்... பொறு, பொறு... இதோ...” என்று ஏதோ மந்திரம் போடலானான். அமன் தானே செத்துப் பிழைத்தவன் போலத் தோற்றம் அளித்தான். நீலம்பாரித்து வெளிறிய முகத்தில் வெறித்து உருட்டி விழித்தன கண்கள். கைகள் முறிந்த கிளைகள் போலத் தொங்கின.

“எழுந்திரு, எழுந்திரு! விழித்துக் கொள்! என்ன இது, அழுக்கு அப்பிய குழந்தைபோல உட்கார்ந்திருக்கிறாய்? வெறும் பூனை அப்பா நீ பார்த்தது! இறந்தவன் கட்டைபோல விறைத்துக் கிடக்கிறான்!” என்றேன்.

அப்போது தான் அமனுக்குப் பேச்சு வந்தது.

“இல்லை, எனக்குப் போதும் போதும் என்று ஆகிவிட்டது. நீங்களே எல்லாம் செய்து கொள்ளுங்கள்” என்று ஈனக் குரலில் சொன்னான். நான் முல்லாவைப் பார்த்தேன்.

இஸ்லாம் மத விதிகளின்படிப் “பிண முழுக்காட்டை மூன்றுபேர் சேர்ந்தே செய்ய வேண்டும். இது உனக்குத் தெரியாதா என்ன?” என்றேன்.

எப்படியோ அவனை இணைங்கச் செய்து கைகொடுத்துத் தூக்கி நிற்கவைத்தோம். பிறகு ஒருவரை ஒருவர் ஊக்கப்படுத்தியவாறு மறுபடி அறை வாசல் வரை போய் ஒருவர் மாற்றி ஒருவராக உள்ளே எட்டிப்பார்த்தோம். அப்புறம் நான் முல்லாவையும் அமனையும் நோக்கிக் கூறினேன்.

“வாருங்கள் வேலை தொடங்குவோம். இல்லாவிட்டால் ஆட்கள் பொறுமை இழந்து தாங்களே இங்கே வந்துவிடுவார்கள்...” –அவர்கள் இருவரும் பேசாதிருக்கவே, நான் மேலே சொன்னேன். “முழுக்காட்டும் தலைமைப் பொறுப்பை ஹஜரத் ஏற்பார். நாம் இருவரும் தண்ணீரை ஊற்றுவோம். ஹஜரத் பிணத்தை நன்றாகத் தேய்த்துக் கழுவினால் ஆண்டவனின் பயங்கர நீதி மன்றத்தில் இது கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். நமக்குப் பணம் வேண்டாம். அடக்கச் சடங்கில் கொடுக்கப்படும் துணித்துண்டு மட்டுமே போதும். சரிதானா?”

அமன் இசைவு தெரிவிக்கும் பானையில் தலை ஆட்டினான். ஆனால் முல்லா மறுத்தான்.

“ஆ, அதுதான் இல்லை. சின்னவர்கள் உழைக்க வேண்டும், பெரியவர்கள் மரியாதை பெற வேண்டும். உடலை நீங்கள் தேய்த்துக் கழுவுங்கள், நான் நீர் ஊற்றுகிறேன். அதோடு உங்களுக்காகப் பிரார்த்தனையும் செய்கிறேன்.” என்றான்.

“பிராத்தனை செய்ய எங்களுக்கும் முடியும். உங்கள் பிரார்த்தனையை உங்களுக்கே வைத்துக் கொள்ளுங்கள். ஒப்புக்கொண்டுவிடுங்கள் முல்லா. மரியாதையாக இசையுங்கள். இல்லாவிட்டால் நான் இறந்தவனின் இனத்தாரை அழைத்து ஒரு விஷயத்தை அவர்களிடம் சொல்லுவேன்... “

“சரியான வார்த்தை” என்றான் அமன்.

முல்லா வகையற்ற எரிச்சலுடன் எங்களைப் பார்த்தான்.

“இப்படிச் சூழ்ச்சி செய்யத் திட்டம் இட்டிருக்கிறீர்களா? கூட்டாளிகள் இப்படித்தான் நடந்து கொள்வார்களோ? நல்லது, போவோம். நான் பிணத்தின் கால்களைப் பிடித்துக் கொள்கிறேன், நீங்கள் தலையைப் பிடித்துக் கொள்ளுங்கள், தூக்கிப் போவோம்.”

“அதுதான் இல்லை, முல்லா. கால்பக்கம் நாங்கள் பிடித்துக் கொள்வோம், தலைப்பக்கம் நீங்கள்!”

வெளியே உள்ளவர்களுக்குக் கேட்காதபடி இரகசியக் குரலில்தான் நாங்கள் வாதம் செய்தோம். வாயில் கதவுகளுக்கு வெளியே இருந்த எவனுக்காவது எங்கள் பேச்சு காதில் விழுந்திருந்தால், நாங்கள் கெட்ட ஆவிகளை விரட்டுவதற்காகத் தீவிரமாக மந்திரம் போடுகிறோமாக்கும் என்று அவன் எண்ணியிருப்பான். ஆனால் ஒருவரும் உற்றுக் கேட்கவில்லை. இறந்தவனை எடுத்துச்சொல்லப் பாடை கட்டுவதில் ஆட்கள் முனைந்திருந்தார்கள்.

நாங்கள் இன்னும் வெகு நேரம் சச்சரவிரட்டிருப்போம். ஆனால் திடீரென்று அமனுக்கு ஒரு யோசனை உதித்தது. “இருங்கள். ஒரு நாலைந்து கஜ நீளக் கயிறு கிடைத்தால் நன்றாய் இருக்கும்” என்றான்.

“உனக்கு எதற்குக் கயிறு?”

“எனக்கு ஒரு யுக்தி தேன்றியிருக்கிறது! அதற்குத்தான்.....போ, தேடு.”

நாங்கள் சவுக்கைகளில் துருவித் தேடினோம். எங்கள் அதிஷ்டம், ஒரு சவுக்கையில் பழைய கவணையில் கட்டியிருந்தது கம்பளிக் கயிறு, சுமார் ஏழு அல்லது எட்டு கஜ நீளம் உள்ளது. அதை அறுத்து எடுத்துக் கெண்டு சவ அறைக்குத் திரும்பினோம். முல்லா கைகளைத் தேய்த்தபடி ஏதோ முணுமுணுத்துக் கொண்டு பக்கத்தில் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தான். தன் சொந்த யோசனையால் ஏற்பட்ட மகிழ்ச்சியில் அமனுக்குத் துணிச்சல் கூட வந்துவிட்டது. உறுதியாக அடி வைத்து அறைக்குள் போய் முல்லாவை அழைத்து, சவத்தின் கால்களை உயர்த்தும்படி கூறினான். முல்லா சற்று சண்டித்தனம் செய்தான். அப்புறம் பிணத்துக்கு முதுகைக் காட்டியவாறு நின்று வலிப்பு வந்தவன் போல உடலை நெளித்து, எருக்குழி வண்டுகள் ஒரு பத்தை விழுங்கிவிட்டவன் போல முகத்தைச் சுளித்துக் கொண்டு, இறந்தவனுடைய பதங்களைப் பற்றித் தூக்கினான். அமன் சட்டென அவற்றின் அடியில் கயிற்றை நுழைத்து, சுருக்கிட்டு, சவத்தின் கணுக்கால்களுக்கு மேலே இழுத்து இறுக்கினான். அமன் கட்டளையிட்டதும் நாங்கள் மூவரும் கயிற்றின் மறு நுனியைப் பிடித்துக் கொண்டு பிணத்தைக் குளத்துக்கு இழுத்துப் போனோம்.

“எப்படி என் யோசனை? அருமையானது, அல்லவா? இப்போது இதைத் தலைகீழாகக் குளத்தில் விட்டு ஒரு மூன்று தடவை அலசுவோம், அவ்வளவு தான்! இது சுத்தம் ஆகிவிடும்!” என்று குளத்தை நெருங்கியதும் சொன்னான் அமன்.

“ஆண்டவன் அருள்க. உண்மையிலேயே இவன் சுத்தம் ஆகிவிடுவான்!” என்றான் முல்லா.

நாங்கள் மேற்கொண்டு எதுவும் போசாமல் கயிற்றைப் பிடித்துக் கொண்டு பிணத்தைத் தண்ணீரில் இறக்கிக் குளத்தின் ஒரு மூலையிலிருந்து மற்றொரு மூலைக்கு இழுத்து அதை அலசத் தொடங்கினோம். இந்த வேலை எங்களுக்குச் சுவையாய் இருந்ததால் மூன்று தடவைகள் அல்ல, பத்து தடவைகளுக்குக் குறையாமல் அலசினோம். தேர்ந்த பிணமுழுக்காட்டி எவனும் தன் வேலையை இதைவிட நேர்த்தியாகச் செய்திருக்க மாட்டான் என்ற முழு நம்பிக்கையுடன் கடைசியில் அலசுவதை நிறுத்தினோம். இப்போது பிணத்தை வெளியே எடுக்க வேண்டியிருந்தது. கயிற்றை மெள்ள மெள்ள இழுக்கத் தெடங்கினோம். ஆனால் அது எதிர்பாரா விதமாக விறைப்பாயிற்று. பிணம் மேற்கொண்டு அசையவில்லை. அடித்தளத்துடன் ஒன்றிவிட்டது போல ஆகிவிட்டது. நாங்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டோம். அமன் மறுபடி வெளிறிப் போனான். முல்லாவோ, “உதவி செய், ஆண்டவனே!, காப்பாற்று, ஆண்டவனே” என்று ஜெபித்தவாறு கயிற்றை மேலும் மேலும் இழுத்தான். நான் என் வசமின்றியே வெளி வாயில் பக்கம் நோக்கினேன்.

“உதவிக்கு ஆட்களை அழைப்போமா?” என்று கேட்டவன், அது என்ன அசட்டுத்தனமான கேள்வி என்பதை அக்கணமே உணர்ந்தேன்.

“மூடா, உனக்கு என்ன மதி மயங்கிவிட்டதா? உனக்கு ஆட்கள் எப்படி உதவுவார்கள், தெரியுமா?... கத்துவதில் செலவிட நினைத்த சக்தியைக் கயிற்றை இழுப்பதில் ஈடுபடுத்து.” என்றான் அமன். நாங்கள் பாப்ளார் அடிமரத்தில் கால்களை ஊன்றியவாறு மறுபடி இழுக்கலானோம். அதற்குள் வாயிற்கதவு தட்டப்பட்டது. முல்லா கயிற்றை விட்டுவிட்டான்.

“சற்று பொறுங்கள். நாங்கள் இன்னும் இடுப்புவரை கூடக் கழுவி ஆகவில்லை. கழுவியதும் நாங்களே கூப்பிடுகிறோம்!” என்று கத்தினான்.

அவன் மறுபடி கயிற்றைப் பிடித்துக் கொண்டான். நாங்கள் இழுத்தோம். ஆனால் அந்துப் பூச்சி அரித்து நைந்து போயிருந்த கயிறு சடக் கென்று அறுந்துவிடவே நாங்கள் மூவரும் பின்னே சரிந்தோம். தாமதிக்க நேரமோ இல்லை. பொழுது சாயும் தறுவாய் ஆகிவிட்டது.

“முல்லா! உடைகளைக் களையுங்கள். குளத்தில் இறங்க வேண்டியிருக்கும். ஐந்து ரூபிள்கள் சும்மா கிடைத்துவிடுமா உங்களுக்கு?” என்றேன்.

முல்லாவின் உடம்பெல்லாம் பச்சை பாரித்துப் போயிற்று.

“அட நாய்க்குட்டி! உனக்கும் இதே போன்ற முழுக்காட்டு கிடைக்குமாக, அதுவும் சீக்கிரத்தில்! உடைகளையும் எண்ணமே எனக்கு இல்லை. என்ன சொல்கிறாய், ஊம்?” என்றான்.

“சொல்கிறேன், ஆனால் உங்களிடம் அல்ல. இதோ வாயிலுக்குப் போகிறேன், அங்கே...”

நான் வாக்கியத்தை முடிப்பதற்குள் முல்லா வசவும் திட்டுமாக உடைகளையத் தொடங்கினான். துணிச்சல் அடைந்துவிட்ட அமனும் அவன் பின்னே நீரில் இறங்கினான். இருவரும் அடித்தளத்தைத் துழாவலானார்கள். முடிவில் பிணத்தின் கால்கள் நீருக்கு மேல் தெரிந்தன. அதன் தலை பாப்ளார் வேர் வளைவில் மாட்டிக் கொண்டிருந்தது. எங்கள் கறிற்று நுனியை கால்களில் இருந்த அறுந்த பகுதியுடன் முடிந்தான் அமன். முல்லாவும் அவனும் கரையேறினார்கள். நாங்கள் மறுபடி இழுக்கத் தலைப்பட்டோம். முடிவில் பிணம் அசைந்து கொடுப்பதாக உணர்ந்தோம். நெறுநெறுவென்ற ஒசையும் வேறு ஏதோ விந்தையான பயங்கர ஒலியும் கேட்டன. பிணம் மேற்பரப்புக்குத் துள்ளிவந்தது. நாங்கள் மறுபடி தரையில் விழுந்தோம். பரபரப்புடன் எழுந்து பார்க்கிறோமோ, அப்பாவிப் பிணம் தலை இல்லாமல் மிதக்கக் கண்டோம்!

இந்த கோரத்தைப் பார்த்து நாங்கள் அயர்ந்துபோய் உட்கார்ந்துவிட்டோம். இனி என்ன செய்வது? அப்போது முல்லா எதிர்பாரா வகையில் உண்மை வீரத்தைக் காட்டினான். அவன் மறுபடி குளத்தில் இறங்கி, கையால் நீருக்குள் வேர்களுக்கிடையே துழாவி, முகத்தை ஒரேயடியாகச் சுளித்துக் கொண்டு அறுந்த தலையை வெளியே எடுத்தான். நானும் அமனும் மறுபக்கம் திரும்பிக் கொண்டோம். எங்களுக்குக் குமட்டல் எடுத்தது. முல்லாவோ, எங்கள் சாமான்களில் தேடி, நாங்கள் வாங்கியிருந்த ஊசியையும் நூலையும் எடுத்துக் கொண்டான். உடலைக் குளத்திலிருந்து வெளியேற்றும்படி எங்களுக்குக் கட்டளையிட்டான். பின்பு தலையை உடலுடன் பொருத்தித் தைக்கத் தொடங்கினான்! இந்த வேலையில் தான் கைதேர்ந்தவன் என்று அவன் மெய்ப்பித்தான். நூலை ஆறாக முறுக்கி மளமளவென்று லாகவமாகத் தையல் போட்டான். சற்று நேரத்தில் தலை அதன் இடத்தில் பொருந்திவிட்டது... இப்போது அவன் பாவங்கள் எல்லாவற்றையும் மன்னிக்க நான் தயாராய் இருந்தேன். துணியைப் பிரிக்கச் சொல்லி ஒரு நொடியில் சவச்சீலை தைத்துவிட்டான். பிண்த்தின் உடல் மூடப்பட்டது. ஆனால் துணித்துண்டு நீளம் போதவில்லை. கால்கள் திறந்திருந்தன. எங்கள் கயிறு இறுக்கிய பதிவுகள் அவற்றில் தெரிந்தன. அப்போது நாங்கள் எங்கள் பயணப் பையைச் சட்டெனக் காலி செய்து அதிலிருந்த சாமான்களை இடுப்புக் குட்டைகளில் கட்டிக் கொண்டோம், பையால் பிணத்தின் கால்களை மூடி, சவச்சீலையுடன் அதைச் சேர்த்துத் தைத்துவிட்டோம்.

அமன் உடைகளை அணிந்து கொண்டான். முல்லாவும் அவ்வாறே செய்து, தலைப்பாகையை மறுபடி கட்டிக் கொண்டு, மேலங்கியைச் சரிப்படுத்திக் கொண்டான். பின்பு வெள்ளிக்கிழமைத் தொழுகை படிப்பவன் போன்ற தோற்றத்துடன் பிணத்தின் பக்கத்தில் நின்று கொண்டு எனக்குச் சைகை காட்டினான். நான் கற்பாளத்தை அப்புறப்படுத்தினேன். பாவம், சித்திரவதை செய்யப்பட்ட இறந்தவனின் இனத்தவர்கள் அழுது அரற்றுவதற்கு ஏற்கனவே தயாராயிருந்தார்கள். வாயிலுக்கு வெளியே அப்போதுதான் மிலாறுகளால் பின்னி நீண்ட கட்டைகளுடன் இணைக்கப்பட்டிருந்த பாடை வைத்திருந்தது. கட்டைகள் வண்டி நுகத்தடிகள் போலிருந்தன. அவற்றில் இரண்டு குதிரைகள் பூட்டப்பட்டிருந்தன.

இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள இருந்தவர்கள் கோட்டைக்குள் பாய்ந்து வந்தார்கள். அவர்கள் பிணத்தைச் சூழ்ந்து கொண்டு முறைப்படி ஒப்பாரி வைக்கத் தொடங்கினார்கள், சந்தர்ப்பத்துக்கு ஏற்ப ஒலமிட்டாக்ள். சிலர் துக்கத்துடன் சவச்சீலையை வருடினார்கள். எவனோ ஒருவன், தலை இருந்த இடத்தைத் தடவினாடன்- உடனேயே ஆச்சரியக் கூக்குரலிட்டான். பிணம் மல்லாக்கக் கிடந்தது. ஆனால் முகம் இருக்க வேண்டிய இடத்தில் பின்மண்டை இருந்தது!

நான் கல்லாய்ச் சமைந்து போனேன். முல்லா அறுந்த தலையை அவசரத்தில் முகம் கீழாக வைத்துத் தைத்துவிட்டான்!

இனத்தாரின் கும்பல் அனைத்தும் அக்கணமே ஒலமிடுவதை நிறுத்திவிட்டு முல்லாவின் அருகே குழுமி அவனையும் எங்களையும் நெட்டித் தள்ளத் தொடங்கிற்று.

“ஏய், அவன் முகம் ஏன் கீழ் நோக்கி இருக்கிறது?” என்று ஒருவன் கேட்டான்.
முல்லா வெளிறிப்போய் நின்று கொண்டிருந்தான், ஆனால் அப்போதும் மனங்கலங்கவில்லை.

“அல்லாவின் சித்தம் அப்படி. வாழ்நாளில் இவன் நிறையப் பாவங்கள் செய்திருப்பான். அதனால் தான் அல்லா இவன் தலையைத் திருப்பிவிட்டார்!” என்று விதிக்குத் துயரத்துடன் முடிவணங்குபவன் போன்ற பாவனையில் கைகளை விரித்தான்.

நான் அச்சத்தால் நடுங்கினேன் என்றாலும் முல்லாவின் கலங்கா மனவுறுதியையும் அவனுடைய சமயோசித புத்தியையும் வியந்து பாராட்டினேன். பலர் முகங்களில் ஆத்திரத்துக்குப் பதில் குழப்பம் தென்பட்டதைக் கண்டதும் விபத்து விலகிவிட்டது என்று கூட நினைத்தேன். அதுதான் பிசகு! வெயிலில் கறுத்த இந்த மேய்ப்பர்கள் எளிதில் எதையும் நம்பிவிடும் வெகுளிகள் அல்ல என்பது விரைவில் தெளிவாயிற்று.

“எங்கே, சவச்சீலையைத் தையல் பிரிப்போம்!” என்று ஒருவன் கத்தினான். அவ்வளவுதான். முல்லாவின் சட்டைகையை விடாது பிடித்துக் கொள்ள மறக்காமல் கூட்டத்தினர் எல்லோரும் மறுபடி பிணத்தின் பக்கம் திரளாகச் சென்றார்கள். துணித் தையலைப் பிரித்ததுமே கழுத்தில் போட்டிருந்த தையல் வெளியே தெரிந்தது. அப்போது அவர்கள் எல்லாரும் ஒரு மொத்தமாகப் போட்ட கூப்பாட்டில் பழைய கோட்டைச் சுவர் அக்கணமே தகர்ந்து விழுந்து விடும்போல் இருந்தது. கூட்டம் முழுவதும் முல்லாமேல் பாய்ந்தது. எங்களை அவர்கள் கணப்போது கவனிக்காமல் விட்டுவிட்டார்கள். நாங்கள் திகிலால் எல்லாவற்றையும் மறந்துவிட்டு, அவர்கள் கைகளுக்கும் கால்களுக்கும் இடையே புகுந்து நழுவி, நீர்ப்பாசியிலிருந்து தவளை துள்ளுவதுபோல முகப்பிலிருந்து துள்ளி வெளியே ஒடினோம். சில ஆட்கள் எங்களைத் துரத்திக் கொண்டு வந்தார்கள். ஆனால் இந்த மேய்ப்பர்கள் தங்கள் வாழ்க்கையின் பெரும் பகுதியைக் குதிரைச் சவாரியிலேயே கழித்தவர்கள். சொந்தக் கால்களால் ஒடுவதில் இவர்களுக்கு லாகவம் பற்றாது. எங்களுடன் இவர்கள் போட்டி போடுவது எங்கே? விரைவிலேயே எங்களுக்கும் அவக்ளுக்கும் இடையே தூரம் கணிசமாக அதிகரித்தது. ஆனால் அவர்களுக்குக் குதிரைகளின் நினைவு வந்து விடலாம். வந்தால் நாங்கள் தெலைந்தோம். இத்தகைய சந்தர்ப்பங்களில் ஆளுக்கு ஒரு பக்கமாக ஒடுவதே மேல். வட்டாரப் பையன்களின் இந்த மூதறிவை நான் வெகு காலமாகவே பெற்றிருந்தேன். இடப் புறம் ஒடு. என்று அமனிடம் சொல்லிவிட்டு நான் வலப்புறம் ஒடினேன். துரத்திவந்தவர்களின் ஒட்ட வேகம் மட்டுப்பட்து, அவர்கள் வரவரப் பின்தங்கினார்கள். ஒடும் போதே நான் முல்லாவைப்பற்றி நினைத்தேன். அவனுக்கு என்ன நேர்ந்திருக்கும்? உயிர் பிழைத்தால் எப்போதாவது சந்திப்போம். இல்லாவிட்டால்--ஆண்டவனே, அவன் ஆன்மா சாந்தி அடைவதாக...

(மொழிபெயர்ப்பாளர்- பூ. சோமசுந்தரம்; வெளியீடு- முன்னேற்றப் பதிப்பகம், மாஸ்கோ)

4 comments:

Nathanjagk said...

குறிப்பிடத்தக்க முயற்சி உங்கள் வலைபதிவு. என்னை எப்போதும் பின் தொடரும் இலக்கிய நினைவு ருஷ்ய இலக்கியங்கள்தான் - பூ. ​சோமசுந்தரத்தின் மொழிபெயர்ப்பில். எனக்கு பிடித்தமான ருஷ்ய எழுத்தாளர் வசீலி ஷுக்ஷீன். இவருடைய ​மொழிபெயர்ப்புக் க​தைகள் ஏதும் உங்களிடம் உண்டா?

சரவணன் said...

நன்றி ஜெகநாதன். வசீலி ஷுக்ஷீன் எழுதிய புத்தகம் அல்லது கதை பெயரைக் குறிப்பிட்டால் ஒருவேளை எனக்கு நினைவு வரலாம்!

Nathanjagk said...

வாழ விருப்பம் (சிறுகதைகள்) இது ஒன்றுதான் நான் படித்தது. புத்தகத்தை எங்கோ தொ​லைத்துவிட்டேன். வசீலியின் பிற புத்தகங்கள்:
I Want To Live (Okhota Zhit)
The Lyubavins (Lyubavini)
There In The Distance (Tam, Vdali)
Characters (Kharaktery)
Conversations Under a Clear Moon (Besedy Pri Yasnoi Lune)
இவர் ஒரு குறிப்பிடத்தக்க (தங்க சிங்கம் விருது ​பெற்ற) இயக்குநர் மற்றம் நடிகரும் கூட. உங்கள் அன்பிற்கு நன்றிகள்!

சரவணன் said...

தகவலுக்கு நன்றி ஜெகநாதன். இணையத்தில் நீங்கள் குறிப்பிடும் நூல்கள் கிடைக்கிறதா பார்க்கிறேன். உங்கள் ஆர்வம், ஆதரவு மகிழ்ச்சி தருகிறது!